என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- கனிமொழி
Byமாலை மலர்19 April 2018 7:50 AM GMT (Updated: 19 April 2018 7:50 AM GMT)
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நிலைபாடு என காமலாபுரம் விமானநிலையத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கனிமொழி எம்.பி ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது அரசு செயல்பாடாத அரசாக உள்ளதால் தினந்தோறும் போராட்டங்களாக உள்ளது. தமிழகத்தில் கவர்னர் பல்கலைக்கழக விவகாரத்தில் விசாரணை கமிஷம் அமைக்க அதிகாரம் கிடையாது. அப்படி அமைத்தாலும் அதில் பெண்கள் இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதை மதிக்காத கவர்னர் தன்னிச்சையாக அமைத்துள்ளார்.
கவர்னர் பல இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு தி.மு.க. எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. மேலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நிலைபாடு.
தி.மு.க. ஆட்சியின்போது விமான நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அப்போதே அந்த திட்டத்தை கைவிட்டோம். தற்போது அ.தி.மு.க. அரசு விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் என அவித்துள்ளது. எப்போதும் தி.மு.க. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் எதிர்க்கும். இதே போன்று சேலம் விமான நிலைய விரிவாக்கத்தையும் தி.மு.க. எதிர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கனிமொழி எம்.பி ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது அரசு செயல்பாடாத அரசாக உள்ளதால் தினந்தோறும் போராட்டங்களாக உள்ளது. தமிழகத்தில் கவர்னர் பல்கலைக்கழக விவகாரத்தில் விசாரணை கமிஷம் அமைக்க அதிகாரம் கிடையாது. அப்படி அமைத்தாலும் அதில் பெண்கள் இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதை மதிக்காத கவர்னர் தன்னிச்சையாக அமைத்துள்ளார்.
கவர்னர் பல இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு தி.மு.க. எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. மேலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது தி.மு.க.வின் நிலைபாடு.
தி.மு.க. ஆட்சியின்போது விமான நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அப்போதே அந்த திட்டத்தை கைவிட்டோம். தற்போது அ.தி.மு.க. அரசு விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் என அவித்துள்ளது. எப்போதும் தி.மு.க. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் எதிர்க்கும். இதே போன்று சேலம் விமான நிலைய விரிவாக்கத்தையும் தி.மு.க. எதிர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X