என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனிமொழி பற்றிய எச்.ராஜா கருத்துக்கு பாரதிராஜா கண்டனம்
Byமாலை மலர்19 April 2018 5:54 AM GMT (Updated: 19 April 2018 5:54 AM GMT)
தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி. குறித்து எச்.ராஜா டுவிட்டரில் கருத்து பதிவிட்டதற்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆறுமுறை முதல்வராயிருந்த திராவிட இயக்கத்தின் சுயமரியாதை தலைவர், பெரியவர் கலைஞரின் குடும்பத்தை இழி சொல்லால் இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கது.
தலைவர், கலைஞரின் கைபிடித்த ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி தவறான உறவில் பிறந்தவரா?
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சினையை திசை திருப்ப, நடத்தும் இந்த நாடகத்தை எம் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். யாரையோ காப்பாற்ற, யாரையோ பலியிடும் இந்த பிரச்சினையை சற்று உற்று நோக்குங்கள்.
ஆளும் அரசியல்வாதிகள் நாகரீகம் மறந்து இப்படி அநாகரீகமாக பேசி தமிழ் நாட்டை ஒரு போர்க்களமாக மாற்ற நினைக்கிறார்கள்.விழித்திக்கொள்! தமிழா, விழித்திக்கொள்! சொரணை கெட்டவர்கள் அல்ல தமிழர்கள். என்றும் துணிந்து நிற்போம்.
தாய்மார்களே தமிழகம் உங்கள் கையில், ஒன்றுபடுங்கள்! உரத்த குரல் கொடுங்கள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆறுமுறை முதல்வராயிருந்த திராவிட இயக்கத்தின் சுயமரியாதை தலைவர், பெரியவர் கலைஞரின் குடும்பத்தை இழி சொல்லால் இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கது.
தலைவர், கலைஞரின் கைபிடித்த ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி தவறான உறவில் பிறந்தவரா?
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சினையை திசை திருப்ப, நடத்தும் இந்த நாடகத்தை எம் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். யாரையோ காப்பாற்ற, யாரையோ பலியிடும் இந்த பிரச்சினையை சற்று உற்று நோக்குங்கள்.
ஆளும் அரசியல்வாதிகள் நாகரீகம் மறந்து இப்படி அநாகரீகமாக பேசி தமிழ் நாட்டை ஒரு போர்க்களமாக மாற்ற நினைக்கிறார்கள்.விழித்திக்கொள்! தமிழா, விழித்திக்கொள்! சொரணை கெட்டவர்கள் அல்ல தமிழர்கள். என்றும் துணிந்து நிற்போம்.
தாய்மார்களே தமிழகம் உங்கள் கையில், ஒன்றுபடுங்கள்! உரத்த குரல் கொடுங்கள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X