என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியில்லாததால் இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் எடுத்து செல்லும் அவலம்
Byமாலை மலர்18 April 2018 6:05 PM GMT (Updated: 18 April 2018 6:05 PM GMT)
நாகை அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதியில்லாததால் இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் எடுத்து செல்லும் அவலநிலை நிலவுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் காந்தி மகான்தெரு, சிவன்கோவில் தெரு, உழவன்தெரு, சுனாமி குடியிருப்பு, சங்கிளிபுரம் ஆகிய 5 பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று அந்த பகுதியில் தனியாக சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுடுகாடு, பரவை ஆற்றின் மறுகரையில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்து போனால் இந்த ஆற்றை கடந்து தான் சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் ½ கிலோமீட்டர் தூரம் உள்ள பரவை ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து சென்று தான் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர் உயிரிழந்தார். அதைதொடர்ந்து அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதி மக்கள் காந்திமதியின் உடலை, பரவை ஆற்றின் தண்ணீரில் இறங்கி சென்று தான் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கான சுடுகாடு ஆற்றின் மறுகரையில் தான் உள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் காந்தி மகான்தெரு, சிவன்கோவில் தெரு, உழவன்தெரு, சுனாமி குடியிருப்பு, சங்கிளிபுரம் ஆகிய 5 பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று அந்த பகுதியில் தனியாக சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுடுகாடு, பரவை ஆற்றின் மறுகரையில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்து போனால் இந்த ஆற்றை கடந்து தான் சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் ½ கிலோமீட்டர் தூரம் உள்ள பரவை ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து சென்று தான் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர் உயிரிழந்தார். அதைதொடர்ந்து அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதி மக்கள் காந்திமதியின் உடலை, பரவை ஆற்றின் தண்ணீரில் இறங்கி சென்று தான் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கான சுடுகாடு ஆற்றின் மறுகரையில் தான் உள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X