என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொம்பாக்கத்தில் தவறுதலாக பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட ஆட்டோ டிரைவர் மரணம்
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் செங்கேணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). ஆட்டோ டிரைவர்.
இவருக்கு மீனா (36) என்ற மனைவியும், சுரேஷ்குமார் (20) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்ததால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று லட்சுமணன் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் தான் ஆஸ்பத்திரியில் வாங்கி வைத்திருந்த மருந்தை எடுத்து குடிக்க முயன்றார்.
அப்போது அருகிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்தார். இதில் லட்சுமணன் மயங்கி கீழே விழுந்தார்.
அப்போது உறவினர்கள் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார்.
இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்