என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே கரட்டு பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
Byமாலை மலர்18 April 2018 12:12 PM GMT (Updated: 18 April 2018 12:12 PM GMT)
போடி அருகே கரட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள கழுகுமலை அடிவாரம் கரட்டுப்பகுதியில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் இதைப்பார்த்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கூறியதின் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர் இறந்து பல நாட்கள் ஆன நிலையில் இருந்ததால் முகம் மற்றும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவருக்கு வயது சுமார் 40 இருக்கும்.
இறந்தவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. போடி அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X