என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்18 April 2018 11:39 AM GMT (Updated: 18 April 2018 11:39 AM GMT)
போடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
போடி ராசிங்காபுரம் பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது52). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் அறையின் உள்ளே சென்று பதட்டத்துடன் பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை கொள்ளைபோயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கொள்ளை சம்பவம் குறித்து பாலசுப்பிரமணி போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X