என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்லிமித்திகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விவேக் ( வயது 22). இவர் கும்மிடிபூண்டி சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றது. வருகிற 26-ந்தேதி ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்களது திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் விவேக், சத்தியவேடு பகுதியில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சத்தியவேடு நகர எல்லையில் சென்று கொண்டிருந்த போது எதிரே பொன்னேரியிலிருந்து சத்தியவேடு நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த விவேக்கை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சத்தியவேடு சப் இன்ஸ்பெக்டர் மல்லேஸ் யாதவ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் விவேக் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்