என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் மீண்டும் ஆஜர்
Byமாலை மலர்18 April 2018 7:15 AM GMT (Updated: 18 April 2018 7:15 AM GMT)
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் 2-வது முறையாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜர் ஆனார்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தில் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர்கள், அரசு துறை அதிகாரிகள், செயலாளர்கள், அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது 2 முறை பார்த்ததாகவும், 15 ஆண்டுகளில் சசிகலாவை 1 முறை மட்டுமே பார்த்ததாகவும் கூறி உள்ளார். இந்த பதிலை கேட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய உதவியாளர் பூங்குன்றன் ஏற்கனவே ஒருமுறை ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.
இவரிடம் ஜெயலலிதா மரணம் பற்றி போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டன.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தில் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர்கள், அரசு துறை அதிகாரிகள், செயலாளர்கள், அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது 2 முறை பார்த்ததாகவும், 15 ஆண்டுகளில் சசிகலாவை 1 முறை மட்டுமே பார்த்ததாகவும் கூறி உள்ளார். இந்த பதிலை கேட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய உதவியாளர் பூங்குன்றன் ஏற்கனவே ஒருமுறை ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.
இவரிடம் ஜெயலலிதா மரணம் பற்றி போயஸ்கார்டனில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X