என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூர் அருகே தொடர் மழையால் 23 வீடுகள் சேதம்
Byமாலை மலர்17 April 2018 1:08 PM GMT (Updated: 17 April 2018 1:08 PM GMT)
குன்னூர் அருகே தொடர் மழை காரணமாக சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், 23 வீடுகள் சேதம் அடைந்தன.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செல்லும் சாலையில் சட்டன்விதைக்காடு அருகே உள்ள சாலையோரம் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
அபாயகரமான வளைவு என்பதால் மழை பெய்யும் போது பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. சம்பவ இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர் மழையால் 23 வீடுகள் சேதமடைந்தன. ஏற்கனவே பழுது பார்க்கப்பட்ட சாலைகளும் பெய்ர்ந்து விட்டது. தொடர் மழையின் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் புதிய நீரூற்றுக்களும் அதிகரித்துள்ளன. மேலும் டபுள் ரோடு, கே.என். ஆர். குரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பால்காரர் லைன், காட்டேரி, காந்திபுரம், அம்பேத்கார் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் தடுப்பு சுவர்கள் சரிந்து விழுந்தன. கனமழை பெய்தால் மண்சரிவு அபாயம் உள்ளது. இதனையடுத்து வருவாய்த்துறை, மின் வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செல்லும் சாலையில் சட்டன்விதைக்காடு அருகே உள்ள சாலையோரம் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
அபாயகரமான வளைவு என்பதால் மழை பெய்யும் போது பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. சம்பவ இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர் மழையால் 23 வீடுகள் சேதமடைந்தன. ஏற்கனவே பழுது பார்க்கப்பட்ட சாலைகளும் பெய்ர்ந்து விட்டது. தொடர் மழையின் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் புதிய நீரூற்றுக்களும் அதிகரித்துள்ளன. மேலும் டபுள் ரோடு, கே.என். ஆர். குரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பால்காரர் லைன், காட்டேரி, காந்திபுரம், அம்பேத்கார் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் தடுப்பு சுவர்கள் சரிந்து விழுந்தன. கனமழை பெய்தால் மண்சரிவு அபாயம் உள்ளது. இதனையடுத்து வருவாய்த்துறை, மின் வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X