search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்கால் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    காரைக்கால் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    காரைக்கால் அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இரவு இவர் காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு, நடந்து வீடு திரும்பினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம 2 மனிதர்கள் சாந்தியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பினர்.

    சாந்தியின் அலறல் சப்தம் கேட்டு, சாலையில் சென்றோர், மோட்டார் சைக்கிளை விரட்டிச்சென்றனர். அதற்குள், 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சாந்தி காரைக்கால் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×