search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
    X

    சூலூர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

    சூலூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மேற்கு அரசூரை சேர்ந்தவர் செந்தில் குமார். தனியார் கல்லூரி பேராசிரியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்றார்.

    கல்லூரி முடிந்ததும் தனது தாயாரை பார்த்து விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது.

    பேராசிரியர் செந்தில் குமார் வேலைக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து செந்தில் குமார் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×