search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    தஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணா சீரணி திடலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வல்லம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை செயல்படுத்தாத மறுத்த மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து கட்சிகள், அமைப்புகள் சார்பாக பல்வேறு போராட்டம் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் தஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணா சீரணி திடலில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் காலை 9 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×