என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்17 April 2018 4:57 AM GMT (Updated: 17 April 2018 4:57 AM GMT)
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார். #Jayalalithaa #OPS
சென்னை:
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்- யாரெல்லாம் பார்த்தார்கள் என்பது இன்னும் சர்ச்சையாகவே உள்ளது.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் விசாரணை ஆணையத்தில் கூறும்போது, ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உடல்நிலை தேறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்’ என்று கூறி உள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதவை நான் ஆஸ்பத்திரியில் ஒரு நாள் கூட பார்க்கவில்லை என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
அந்த கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, ஜெயலலிதாவை நான் ஒருமுறை கூட பார்க்கவில்லை. எனது மனைவி கூட அம்மாவை பார்த்தீர்களா? என்று தினமும் கேட்பார். எனக்கு பொய் சொல்ல மனம் வராது என்பதால் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று தெரிவித்தேன் என்றார்.
இப்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் நேற்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், அரசு டாக்டர்கள் சுதா சேஷையன், சுவாமிநாதன், ஜெயலலிதாவின் செயலாளர் வெங்கட ரமணன், போயஸ்கார்டனில் உள்ள சமையல்காரர் ராஜம்மாள் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார்கள். இவர்களிடமும் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ஜெயலலிதா பற்றி ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் உயிரோடு இருந்தவரை நான் பார்க்கவே இல்லை என்று கூறி இருக்கிறார்.
எனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை எந்தெந்த அமைச்சர்கள் பார்த்தார்கள்? யார்- யார் பார்க்கவில்லை என்ற சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.#Jayalalithaa #OPS
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்- யாரெல்லாம் பார்த்தார்கள் என்பது இன்னும் சர்ச்சையாகவே உள்ளது.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் விசாரணை ஆணையத்தில் கூறும்போது, ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உடல்நிலை தேறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்’ என்று கூறி உள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதவை நான் ஆஸ்பத்திரியில் ஒரு நாள் கூட பார்க்கவில்லை என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
அந்த கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, ஜெயலலிதாவை நான் ஒருமுறை கூட பார்க்கவில்லை. எனது மனைவி கூட அம்மாவை பார்த்தீர்களா? என்று தினமும் கேட்பார். எனக்கு பொய் சொல்ல மனம் வராது என்பதால் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று தெரிவித்தேன் என்றார்.
இப்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் நேற்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக், அரசு டாக்டர்கள் சுதா சேஷையன், சுவாமிநாதன், ஜெயலலிதாவின் செயலாளர் வெங்கட ரமணன், போயஸ்கார்டனில் உள்ள சமையல்காரர் ராஜம்மாள் ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார்கள். இவர்களிடமும் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ஜெயலலிதா பற்றி ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் உயிரோடு இருந்தவரை நான் பார்க்கவே இல்லை என்று கூறி இருக்கிறார்.
எனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை எந்தெந்த அமைச்சர்கள் பார்த்தார்கள்? யார்- யார் பார்க்கவில்லை என்ற சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.#Jayalalithaa #OPS
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X