என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு போராட்டம்
Byமாலை மலர்16 April 2018 4:40 PM GMT (Updated: 16 April 2018 4:40 PM GMT)
காஷ்மீரில் வன் புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்கும் போராட்டம் ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ் தேசிய குடியரசு இயக்கம் மற்றும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில், காஷ்மீரில் வன் புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, தமிழக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ராமமூர்த்தி வரவேற்றார். இதில், திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில இணை செயலாளர் இம்தியாஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். முடிவில், கோபி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X