search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூரில் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு போராட்டம்
    X

    ஓசூரில் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு போராட்டம்

    காஷ்மீரில் வன் புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்கும் போராட்டம் ஓசூரில் நடைபெற்றது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ் தேசிய குடியரசு இயக்கம் மற்றும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில், காஷ்மீரில் வன் புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, தமிழக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ராமமூர்த்தி வரவேற்றார். இதில், திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில இணை செயலாளர் இம்தியாஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன  உரையாற்றினார்கள். முடிவில், கோபி நன்றி கூறினார்.
    Next Story
    ×