என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
ஈரோட்டிலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களே இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
ஈரோடு பெருமாள் மலை பகுதி மக்கள் இன்று காலை அந்த பகுதியில் திரண்டனர். பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்த பதாகைகளில் ‘காவிரி நீர் உயிர் நீர்’, ‘காவிரி எங்கள் பிறப்புரிமை’, ‘காவிரி உனக்குன்னா நெய்வேலி எனக்கு’, ‘உழவு இல்லை உணவு இல்லை’, ‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே’, ‘மக்கள் போராட்டமே எதை ஒன்றையும் மாற்றக்கூடியது’ என்பது உள்பட பல வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீக்குளித்து இறந்த சித்தோடு வாலிபர் தர்மலிங்கத்துக்கு பொது மக்கள் அஞ்சலி, வீரவணக்கம் செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்