search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் - ஸ்டாலின்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் - ஸ்டாலின்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட முடிவெடுக்க தி.மு.க சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 3 முக்கிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

    அனைத்துக் கட்சி தலைவர்கள் சென்று பிரதமரை சந்திக்க திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #CauveryManagementBoard #MKStalin #TamilNews
    Next Story
    ×