என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அருகே விபத்து - டோல்கேட் ஊழியர் பலி
Byமாலை மலர்16 April 2018 12:05 PM GMT (Updated: 16 April 2018 12:05 PM GMT)
பெருந்துறை அருகே விபத்தில் டோல்கேட் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள நாகப்பகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசை. இவரது மகன் கார்த்தி (வயது 30).
இவர் விஜயமங்கலம் அருகே உள்ள டோல்கேட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் பணியில் இருந்தார். பணி முடிந்து நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு கிளம்பினார். புறப்பட்ட சிறிது நேரத்தில் சேலம் மார்க்கத்தில் இருந்து வந்த வேனும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கார்த்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X