
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள எல்லபள்ளி கொல்ல கொட்டாங் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பார்த்திபன் (வயது 30). திருவண்ணாமலை அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அவரது நிலத்துக்கு சென்றார். அங்குள்ள பனைமரத்தில் நுங்கு வெட்ட ஏறினார்.
அப்போது கால் தவறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிக்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.