search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் பட்டப் பகலில் 6 பவுன் நகையை திருடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள நரியம்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி சுமதி (வயது 32).

    இவர் நேற்று பிற்பகல் கே.பாறைப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது வாய்க்கால் பாலம் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுமதியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் மற்றும் அரை பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக சுமதி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்.

    Next Story
    ×