search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை வில்லாபுரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
    X

    மதுரை வில்லாபுரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரம்:

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப் போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவன் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவாக ஆசை வார்த்தை கூறியுள்ளான். இதனை நம்பிய அந்த சிறுமி பாண்டியுடன் சென்றாள்.

    அவனியாபுரம் மாநகராட்சி காலனி குடிநீர் தொட்டி பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று பாண்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாத்தா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பாண்டியை கைது செய்தனர். திருமணமான பாண்டி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    Next Story
    ×