search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த 2 இளைஞர்கள் கடத்தல்
    X

    அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த 2 இளைஞர்கள் கடத்தல்

    அரியலூர் அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையை தடுத்த கடலூர் மாவட்ட இளைஞர்கள் 2 பேர் கடத்தப்பட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சன்னாசி நல்லூர் முதல் கோட்டைக் காடு வரையிலான வெள் ளாற்றில் தினமும் நூற்றுக் கணக்கான மாட்டு வண்டிக ளில் மணல் அள்ளி வந்தனர். சிலர் குழுவாக சேர்ந்து ஓரி டத்தில் மணலை சேகரித்து லாரிகளில் வெளி மாவட்டத் திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இரவு நேரங்களில் பலர் பொக்லைன் எந்திரம் மூலமாக மணலை திருடி வந்தனர். இவர்கள் மீது அவ் வப்போது தளவாய் மற் றும் குவாகம் போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனாலும் அரசியல் கட்சிகளின் பின் புலத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வந்தது.

    இதனால் கடலூர் மாவட்டத்தில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படு வதாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதா கவும் புகார்கள் எழுந்தன. எனவே மணல் கொள் ளையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அத்துடன் இதுதொடர் பாக அரியலூர், கடலூர் மாவட்ட மக்களிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட் டது.

    இந்த நிலையில் வெள் ளாற்று பாதுகாப்பு சங் கத்தலைவர் தனவேல் தலைமையில் கடந்த மாதம் 15-ந்தேதி மணல் கொள்ளையை முழுவதும் தடுத்து நிறுத்த கோரி வெள் ளாற்றில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.

    அதனை தொடர்ந்து செந்துறை தாசில்தார் உமா சங்கரி மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சு வார்த்தையில் தளவாய், குவாகம் போலீ சார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து குழு அமைப்பது எனவும், இந்த குழுவினர் நாள்தோறும் ஷிப்டு முறையில் பிரிந்து முழு கண்காணிப்பில் ஈடுபடுவது என்றும், 24 மணி நேரமும் முழுமையான கண்காணிப் பில் ஈடுபட்டு மணல் கொள் ளையை தடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள் ளாற்று பாதுகாப்பு நலச்சங் கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை கைவிட் டனர்.

    ஆனாலும் ஒருபுறம் மணல் திருட்டு தொடர் கதையாகவே இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வெள்ளாற்று பகுதியில் அரி யலூர் மாவட்டத்தை சேர்ந்த வர்கள் மணல் அள்ளி வந் துள்ளனர். இதனையறிந்த கடலூர் மாவட்டம் செம் பேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அங்கு திரண்டு வந் தனர்.

    அவர்கள் இங்கு மணல் அள்ளக்கூடாது என்று எச் சரித்தனர். ஆனால் மணல் கொள்ளையர்கள் அதனை கண்டுகொள்ளாததால் இரு மாவட்டத்தை சேர்ந்த வர்களுக்கும் மோதல் உரு வானது. இதில் ஆத்திரம டைந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக் லைன் எந்திரத்தை அடித்து நொறுக்கினர்.

    இதற்கிடையே மணல் திருட்டை தடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்த மணி கண்டன், பாலாஜி ஆகிய இரண்டு வாலிபர்களை மணல் கடத்தல் கும்பல் தங் களது வாகனத்தில் கடத்தி சென்றது. அத்துடன் பலர் மீது தாக்குதலும் நடத்தியது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் கடலூர் மாவட்ட மருத்துவமனைக ளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள்.

    இதனை கண்டித்து கட லூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அரியலூர் மாவட்ட எல்லைக்குள் வந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கள் கையில் உருட்டுக்கட்டை கள், ஆயுதங்களை வைத் திருந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×