search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி மக்கள் மன்றம் - திண்டுக்கல் மாவட்ட புதிய செயலாளர் அறிவிப்பு
    X

    ரஜினி மக்கள் மன்றம் - திண்டுக்கல் மாவட்ட புதிய செயலாளர் அறிவிப்பு

    ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட புதிய செயலாளராக பட்டிவீரன் (எ) பட்டி ரகு நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் என்றுபெயர் மாற்றப்பட்டது.

    இதன் மூலம், ரஜினியின் புதிய கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. மாவட்டந்தோறும் கட்சியை பலப்படுத்துவதற்காக மாவட்ட, வட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.

    ரஜினி மக்கள் மன்ற அகில இந்திய நிர்வாகி வி.எம்.சுதாகர், மாநில செய லாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் மன்ற நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள், மற்ற நிர்வாகிகள் ரஜினி ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட தம்புராஜ் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் முரணாக தம்பிராஜ் செயல்பட்டதால் அவரை ரஜினி மக்கள் மன்ற பதவி மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அவருடன் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது. நீக்கப்பட்ட தம்பிராஜ் செயல்பாடுகள் குறித்து நன்கு கண்காணித்து அவருடைய பதவி பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று ரஜினி மக்கள் மன்ற மேலிடம் அறிவித்தது. திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் மாவட்ட செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இப்போது திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக பட்டிவீரன் என்கிற பட்டி ரகு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரஜினி மக்கள் மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக பட்டிவீரன் (எ) பட்டி ரகு, தலைவர் ரஜினிகாந்த் ஒப்புதலோடு நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×