search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான் மீது கமி‌ஷனர் ஆபீசில் புகார்
    X

    சீமான் மீது கமி‌ஷனர் ஆபீசில் புகார்

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அண்ணாநகரை சேர்ந்த நர்மதா என்ற பெண் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது கட்சி தொண்டர்களும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். எனவே அவர் மீது கட்சி தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணிச்சலை நல்ல வி‌ஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேச விரோத நடவடிக்கையில் செயல்படும் சீமான் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வதுடன் அவரது கட்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×