search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது
    X

    கோவையில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது

    கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு பகுதியில் அதிக அளவில் பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் அவினாசி சாலையில் சித்ரா, நவ இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த திருப்பதி (19), சேலம் மாவட்டம் வாய்க்கால் பட்டறை புதூரை சேர்ந்த ராமமூர்த்தி (20), அரியானா மாநிலத்தை சேர்ந்த கமல்பைத்யா (21) என்பது தெரியவந்தது.

    இதில் திருப்பதி, ராமமூர்த்தி ஆகியோர் ஒரு கல்லூரியிலும்,கமல்பைத்யா மற்றொரு கல்லூரியிலும் படித்து வருவது தெரிய வந்தது. அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த குமரேசனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×