என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகையில் கோவில் சுவர் இடித்து அகற்றம்- பா.ஜனதாவினர் சாலை மறியல்
கீழ்வேளூர்:
நாகை சொக்க நாதர் கோவில் தெருவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ரோட்டு ஓரத்தில் ஒரு விநாயகர் கோவில் கட்டி வழிப்பட்டு வருகின்றனர். இக்கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்தநிலையில் ரோட்டு ஓரம் உள்ள விநாயகர் கோவிலில் காம்பவுண்டு சுவர் அமைத்துள்ளனர். இதுபற்றி புகார் எழுந்ததால் நாகை தாசில்தார் ராகவன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடம் சென்று விநாயகர் கோவில் காம்பவுண்டு சுவரை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் ஏராளமானோர் நாகை - நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை வெளிப்பாளையம் போலீசார் சம்பவம் இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்