என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதலியார்பேட்டையில் கடைக்கு சென்ற புதுப்பெண் மாயம்
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது26), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் முதலியார்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த பரமசிவம் மகள் சரண்யா (20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று சரண்யா கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு சரண்யா வீடு திரும்பவில்லை. கணவர் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சரண்யா இல்லை.
இதையடுத்து பரமசிவம் தனது மகள் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவிசப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குபதிவு செய்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்கள்.
இதேபோல் அரியாங்குப்பம் மணவெளி சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கோட்டக்குப்பத்தில் மர பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் சுப்ரஜா (வயது17) இவர் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தோழி வீட்டுக்கு சென்று வருவதாக சுப்ரஜா பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சுப்ரஜா இல்லாததால் வேல்முருகன் தனது மகள் மாயமானது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்