என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வராக்க பா.ஜனதா முயற்சி- வெற்றிவேல்
Byமாலை மலர்15 April 2018 8:43 AM GMT (Updated: 15 April 2018 8:43 AM GMT)
தமிழகத்தில் நிர்மலா சீதாரமனை முதல்- அமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்காகவே ராணுவ கண்காட்சியை இங்கு நடத்தி உள்ளனர் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாது:-
எடப்பாடி அரசு, மோடியின் அடிமை அரசாக செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இந்த ஆட்சி அகற்றப்படும்.
ஆர்.கே.நகரில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மக்களிடம் கொள்ளையடித்து வருகிறார்கள். இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருந்து பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பதை விரைவில் பட்டியலிட்டு வெளியிடுவேன்.
ஆர்.கே.நகர் தொகுதி, டி.டி.வி. தினகரன் தொகுதி என்பதால் மீனவர்கள் உள்பட அனைத்து மக்களும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
பா.ஜனதா கட்சியினர் தமிழகத்தில் நிர்மலா சீதாரமனை முதல்- அமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்காகவே ராணுவ கண்காட்சியை இங்கு நடத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாது:-
எடப்பாடி அரசு, மோடியின் அடிமை அரசாக செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இந்த ஆட்சி அகற்றப்படும்.
ஆர்.கே.நகரில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மக்களிடம் கொள்ளையடித்து வருகிறார்கள். இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருந்து பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பதை விரைவில் பட்டியலிட்டு வெளியிடுவேன்.
ஆர்.கே.நகர் தொகுதி, டி.டி.வி. தினகரன் தொகுதி என்பதால் மீனவர்கள் உள்பட அனைத்து மக்களும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
பா.ஜனதா கட்சியினர் தமிழகத்தில் நிர்மலா சீதாரமனை முதல்- அமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்காகவே ராணுவ கண்காட்சியை இங்கு நடத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X