search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது - சண்முகநாதன்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது என்று அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #BanSterlite #TalkAboutSterlite

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழக அரசை பொறுத்த வரை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயல்படும். ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட தற்காலிக அனுமதி மறுப்புதான் செய்யப்பட்டுள்ளது.

    நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவிட வேண்டும். அமைச்சர் கடம்பூர் ராஜூ ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வேண்டாம் என்று கூறியது அவரது தனிப் பட்ட கருத்து. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கிய ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகம் போன்றவை, ஆரம்பத்தில் இருந்து வழங்கிய அனைத்து அனுமதியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்து மக்கள் போராடுகிறார்கள். ஆனால் மக்களை போராடக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. தூத்துக்குடி மக்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு தான் நட்டர்ஜி எம்.பி. பாராளுமன்றத்தில் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் துரோகிகள். தற்போதுள்ள சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தான் தூத்துக்குடி பகுதியில் மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BanSterlite #TalkAboutSterlite

    Next Story
    ×