search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
    X

    சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கோபி:

    கடந்த 23.09.17-ந் தேதி சிறப்பாசிரியர்கள் போட்டி தேர்வுகள் நடந்தது. இந்த போட்டிதேர்வில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இதன் முடிவுகள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிவிகப்பட்டிருந்தது. இது 7 மாதம் கடந்த நிலையிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

    இதையடுத்து ஈரோடு, சென்னை, விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறப்பாசிரியர்கள் தேர்வு எழுதிய 18 பெண்கள் உள்பட 150 பேர் இன்று காலை கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை சந்திக்க அவரது சொந்த ஊரான கோபிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் செங்கோட்டையன் கோபி வெள்ளாளபாளையம் வந்த அவர்களை, “கோபியில் உள்ளஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு சென்று இருங்கள் அங்கு நானே வருகிறேன்” என்று கூறினார்.

    இதையொட்டி பஸ்களில் வந்த ஆசிரியர்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

    சொன்னபடி அங்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம், “மேமாதத்தில் தேர்வு முடிவுகள் வெளிவரும் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் நேர்மையான முறையில் அனைவருக்கும் பணி கிடைக்கும்“ என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கோபியில் இருந்து தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
    Next Story
    ×