என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை
தேனி:
தேனி அருகே உள்ள கூடலூர் என்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் ரபீஸ்குமார். ராணுவவீரர். இவருடைய மனைவி சிவஜோதி(வயது21). ரபீஸ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் விடுமுறைக்காக ஊருக்கு வந்து சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
மனமுடைந்த நிலையில் இருந்த சிவஜோதி கணவர் ஊருக்கு சென்றதும் தனது தந்தை வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி தொப்பம் பட்டிகாலனி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி ஒய்யம்மாள்(வயது46). ஒய்யம்மாள் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்