search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை
    X

    தேனி அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை

    தேனி அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கூடலூர் என்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் ரபீஸ்குமார். ராணுவவீரர். இவருடைய மனைவி சிவஜோதி(வயது21). ரபீஸ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் விடுமுறைக்காக ஊருக்கு வந்து சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    மனமுடைந்த நிலையில் இருந்த சிவஜோதி கணவர் ஊருக்கு சென்றதும் தனது தந்தை வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி தொப்பம் பட்டிகாலனி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி ஒய்யம்மாள்(வயது46). ஒய்யம்மாள் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×