search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    காற்றழுத்தம் நீடிப்பதால் தென் மாவட்டங்களில் பல இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #MeteorologicalCenter

    சென்னை:

    மாலத்தீவு-குமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.

    இதன் காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்தம் நீடிப்பதால் தென் மாவட்டங்களில் பல இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழக மீனவர்கள் மாலத்தீவு, குமரிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் நாளையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விளாத்தி குளத்தில் 11 செ.மீ. மழையும், சிவகங்கையில் 10 செ.மீ. மழையும், பேச்சிப்பாறை, நாகர்கோவில் பகுதியில் தலா 5 செ.மீ. மழையும், கோவில்பட்டி, பூதபாண்டி, கழுகுமலையில் தலா 4 செ.மீ. மழையும், குளச்சல், பேரையூர், மேட்டுப்பாளையம், முதுகுளத்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    நெல்லை, ராமநாதாபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மதுரை, தேனி, கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 1 செ.மீ முதல் 2 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. #MeteorologicalCenter

    Next Story
    ×