search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலைசேவையில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துக்கு பாராட்டு விழா நாளை நடக்கிறது
    X

    கலைசேவையில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துக்கு பாராட்டு விழா நாளை நடக்கிறது

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின், கலையுலகின் 40-ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சீபுரம் படப்பை ரோடு, கரசங்களில் நாளை காலை 11 மணியளவில் தொடங்குகிறது. #vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின், கலையுலகின் 40-ஆம் ஆண்டு பாராட்டு விழா மாநாடு காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை ரோடு, கரசங்களில் நாளை காலை 11 மணியளவில் மங்கள வாத்தியம் முழங்க நிகழ்ச்சி தொடங்குகிறது.

    கலை நிகழ்ச்சி, பட்டி மன்றம் நடைபெற உள்ளன. மாலை 6 மணிக்கு மேல் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலை உலகைச் சார்ந்த பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #vijayakanth

    Next Story
    ×