என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கவர்னர் மாளிகைக்கு மெத்தை, தலையணை வாங்கியதில் ரூ.10 கோடி மோசடி - 2 பேர் கைது
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அலங்கார பொருட்கள், மெத்தை, தலையணை, ஜன்னல் ஸ்கீரீன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை அடையாறை சேர்ந்த தொழில் அதிபர் முகமது யூனுஸ் என்பவர் வழங்கி வந்தார்.
அவர் கடந்த 5 ஆண்டுகளாக பொருட்களை கொடுக்காமலேயே ரசீசு வழங்கி ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை அதிகாரிகள் கிண்டி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குபதிவு செய்து முகமது யூனுசை கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கைது செய்தனர்.
இந்த மோசடியில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கவர்னர் மாளிகையின் உதவியாளராக பணி புரியும் ராஜேஷ், வீட்டு வேலை பார்த்து வந்த ஜஸ்டின் ராஜேஷ் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர்கள் பொருட்கள் வாங்கியதாக போலியாக பில் பெற்று ரூ.10 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். #Governorhouse
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்