என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலாப்பட்டில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி
Byமாலை மலர்13 April 2018 1:34 PM GMT (Updated: 13 April 2018 1:34 PM GMT)
காலாப்பட்டில் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி இறந்து போனார்.
புதுச்சேரி:
புதுவை சின்ன காலாப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு புதுவை வந்து விட்டு பின்னர் மொபட்டில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
சின்ன காலாப்பட்டு பல் கலைக்கழக நுழைவாயில் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஓட்டி வந்த மொபட் மீது அதிவேகமாக மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X