என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உளுந்தூர்பேட்டை-திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல்-122 பேர் கைது
உளுந்தூர்பேட்டை:
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்களை திரும்ப பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் உளுந்தூர் பேட்டையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உளுந்தூர் பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் திருச்சியில் இருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சாகுல்அமீது, ஜோகிந்தர்சிங், போஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 75 பேரை கைது செய்தனர்.
இதேபோல் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் வீர.விடுதலை செல்வன் தலைமையில் 47 பேர் இன்று காலை 11.30 மணிக்கு ரெயில் நிலையம் வந்தனர்.
பின்னர் அவர்கள் மன்னார்குடியில் இருந்து திருப்பதி சென்ற பாம்னி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 47 பேரை அரங்கண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்