என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள குட்கா,போதைபாக்குகள் பறிமுதல்
ஒட்டன்சத்திரம்:
தமிழகத்தில் போதை பாக்குகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதும் வியாபாரிகள் இதனை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
போலீசார் ரோந்து சென்று இவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் போதைபாக்கு விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் குடும்பம் சீரழியும் சூழல் ஏற்படுகிறது.
ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்கு பையுடன் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்ததில் போதைபாக்குள் மற்றும் புகையிலை பொருட்களை அருகில் இருந்த காம்ப்ளக்ஸ் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
குடோனுக்கு சென்ற போலீசார் அங்கிருந்த சுமார் ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள போதைபாக்குகள் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நாகம்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம், முத்துப் பிள்ளை பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்து இவர்கள் யாரிடம் இருந்து குட்கா பொருட்களை பெற்றுவந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்