என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்13 April 2018 12:03 PM GMT (Updated: 13 April 2018 12:03 PM GMT)
தேனி அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 43). முன்னாள் ராணுவ வீரர். தற்போது விவசாயம் பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தாருடன் சின்னமனூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்காக வீட்டை பூட்டிச் சென்றார். இரவு வந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து செல்வம் ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X