search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் பிடிப்பதில் மோதல் - தொழிலாளி கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் பிடிப்பதில் மோதல் - தொழிலாளி கைது

    ஆண்டிப்பட்டி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள கணேசபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏட்டுச்சாமி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 55). சம்பவத்தன்று முத்தம்மாள் அதே பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் டியூப் மாட்டி தண்ணீர் பிடித்தார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த அய்யர் (55), அவரது மனைவி தொந்தியம்மாள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதலாக மாறியது. அய்யர் முத்தம்மாளை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் இதை தடுக்க வந்த ஏட்டுச்சாமிக்கும் காயம் ஏற்பட்டது.

    காயமடைந்த முத்தம்மாள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் அய்யர், தொந்தியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அய்யரை கைது செய்தனர்.

    Next Story
    ×