search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே வாலிபர் குத்திக்கொலை
    X

    மதுரை அருகே வாலிபர் குத்திக்கொலை

    மதுரையில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை புதூர் ஆத்தி குளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது23). இவர் இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். காந்திபுரம் அருகே வந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தினேசை சர மாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்.

    Next Story
    ×