search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு

    தூத்துக்குடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி மரிய தஸ்நேவிஸ் சோனியா(வயது 26). சம்பவத்தன்று இவர் ரேசன் கடைக்கு சென்றுவிட்டு மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது ஒரு இடத்தில் மொபட்டை நிறுத்தி செல்போன் பேசினார். 

    இந்த வேளையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சோனியா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1.20 லட்சம். இதுபற்றிய புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×