search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி
    X

    சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி

    சங்கரன்கோவில் அருகே பைக் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    சங்கரன்கோவில்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் பரமகுரு (வயது28).  கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ராஜபாளையத்தில் இருந்து பாம்புகோவில்சந்தைக்கு செல்வதற்காக தனது பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார். 

    பெருமாள்பட்டி விலக்கு அருகே வந்த போது திடீரென நிலைதடுமாறியதில் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×