என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கிறிஸ்தவ அமைப்புகள்- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 April 2018 1:21 PM GMT (Updated: 12 April 2018 1:21 PM GMT)
கீரனூர் காந்தி சிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கிறிஸ்தவர்கள், விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீரனூர்:
கீரனூர் காந்தி சிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககாலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து திருச்சி மறை மாவட்டம் மற்றும் கீரனூர் மறை மாவட்டம் கிறிஸ்தவர்கள், விவசாய சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மறைமாவட்ட பொறுப்பாளர் ஜுலி தலைமை தாங்கினார். தலைவர் யூஜின், கீரனூர் பங்கு தந்தை எட்வர்டுராஜா மற்றும் 13 பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இணைசெயலாளர் ஆனந்த் மாணிக்கம், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவி, செய லாளர் நடராஜன், நகர தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், தமிழகத்தை வஞ்சிக்காதே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இறுதியில் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கீரனூர் காவல் துறை கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X