என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவளக்குப்பத்தில் வீட்டில் தூங்கிய இளம்பெண் மாயம்
Byமாலை மலர்12 April 2018 11:04 AM GMT (Updated: 12 April 2018 11:04 AM GMT)
தவளக்குப்பத்தில் வீட்டில் தூங்கிய இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
பாகூர்:
தவளக்குப்பம் திருமலை வாசன் நகரை சேர்ந்தவர் ஜப்பார். பழ வியாபாரி. இவரது மகள் பர்வீன் (வயது 19). இவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பர்வீன் மறுநாள் காலையில் பார்த்த போது, மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் பர்வீன் இல்லை.
இதையடுத்து ஜப்பார் தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பர்வீனை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X