என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே காரில் சென்ற 3 பேரை தாக்கிய கும்பல்
Byமாலை மலர்11 April 2018 9:49 AM GMT (Updated: 11 April 2018 9:49 AM GMT)
தேனி அருகே காரில் சென்ற 3 பேரை தாக்கிய கும்பல் கைது செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது36). இவர் தனது நண்பர்கள் ஜெயக் குமார், பிரசாந்த்மோகன் ஆகியோருடன் சின்ன மனூரில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு காரை எடுக்கும் போது ஆட்டோ டிரைவர் செந்தில்முருகன் என்பவர் பாதையை மறித்து ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.
இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்பு சின்னமனூர் சாலையில் சென்ற அவர்களை செந்தில்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் விரட்டிச்சென்று மார்க்கையன்கோட்டை அருகே காரை நிறுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் 3 பேரும் படுகாயமடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து செந்தில்முருகன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X