search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே காரில் சென்ற 3 பேரை தாக்கிய கும்பல்
    X

    தேனி அருகே காரில் சென்ற 3 பேரை தாக்கிய கும்பல்

    தேனி அருகே காரில் சென்ற 3 பேரை தாக்கிய கும்பல் கைது செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது36). இவர் தனது நண்பர்கள் ஜெயக் குமார், பிரசாந்த்மோகன் ஆகியோருடன் சின்ன மனூரில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு காரை எடுக்கும் போது ஆட்டோ டிரைவர் செந்தில்முருகன் என்பவர் பாதையை மறித்து ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

    இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்பு சின்னமனூர் சாலையில் சென்ற அவர்களை செந்தில்முருகன் மற்றும் அவரது நண்பர்கள் விரட்டிச்சென்று மார்க்கையன்கோட்டை அருகே காரை நிறுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் 3 பேரும் படுகாயமடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து செந்தில்முருகன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×