என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமுதி அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு-கணவருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கும்பல் வெறிச்செயல்
Byமாலை மலர்10 April 2018 1:35 PM GMT (Updated: 10 April 2018 1:35 PM GMT)
ராமநாதபுரம் கமுதி அருகே இன்று காலை குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து பெண்ணின் 15 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல் அவரது கணவரை அரிவாள் வெட்டி விட்டு தப்பியோடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பொதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செந்தில் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 மர்ம நபர்கள் இவர்களை பின் தொடர்ந்தனர். விரதக் குளம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளால், செந்தில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
இதில் நிலை தடுமாறிய செந்தில், ஜெயக்கொடி மற்றும் 2 குழந்தைகள் கீழே விழுந்தனர். உடனே அந்த கும்பல் 2 குழந்தைகளையும் பிடித்துக் கொண்டனர்.
ஜெயக்கொடியிடம் ‘நீ அணிந்திருக்கும் நகையை கொடு, இல்லையென்றால் குழந்தைகளை கத்தியால் குத்திக்கொலை செய்து விடுவோம்’ என மிரட்டினர்.
அதிர்ச்சியடைந்த ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை கொள்ளையர்களிடம் கழற்றிக் கொடுத்தார். அப்போது செந்தில் தடுக்க வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செந்திலை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இது குறித்து அபிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சேது விசாரணை நடத்தி வருகிறார்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் கமுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பொதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செந்தில் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 மர்ம நபர்கள் இவர்களை பின் தொடர்ந்தனர். விரதக் குளம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளால், செந்தில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
இதில் நிலை தடுமாறிய செந்தில், ஜெயக்கொடி மற்றும் 2 குழந்தைகள் கீழே விழுந்தனர். உடனே அந்த கும்பல் 2 குழந்தைகளையும் பிடித்துக் கொண்டனர்.
ஜெயக்கொடியிடம் ‘நீ அணிந்திருக்கும் நகையை கொடு, இல்லையென்றால் குழந்தைகளை கத்தியால் குத்திக்கொலை செய்து விடுவோம்’ என மிரட்டினர்.
அதிர்ச்சியடைந்த ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை கொள்ளையர்களிடம் கழற்றிக் கொடுத்தார். அப்போது செந்தில் தடுக்க வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செந்திலை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இது குறித்து அபிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சேது விசாரணை நடத்தி வருகிறார்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் கமுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X