என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே குளத்தில் மண் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்10 April 2018 10:29 AM GMT (Updated: 10 April 2018 10:29 AM GMT)
பழனி அருகே குளத்தில் மண் கடத்திய 5 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.
பழனி:
பழனி அருகே பொன்னிமலைக்கரடு பகுதியில் உள்ள அய்யங்குளத்தில் இருந்து அனுமதி இன்றி லாரிகள் மூலம் சிலர் மண் அள்ளிச்செல்வதாக சப்-கலெக்டர் அருண்ராஜுக்கு புகார் வந்தது.
இதையடுத்து சப்-கலெக்டர் அருண்ராஜ், தாசில்தார் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆயக்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போடு அந்த வழியாக மண் ஏற்றி வந்த 5 லாரிகளை நிறுத்தி அதை ஓட்டி வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என சோதனையிட்டனர்.
அப்போது ஆவணங்கள் இன்றி அவர்கள் மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.
மேலும் லாரிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X