என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமல் கூட்டம் பற்றி கிண்டல்: அமைச்சர் செல்லூர்ராஜூ - ஸ்ரீபிரியா மோதல்
Byமாலை மலர்9 April 2018 6:55 AM GMT (Updated: 9 April 2018 6:55 AM GMT)
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பொதுக்கூட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெரிவித்துள்ள கருத்துக்கு நடிகை ஸ்ரீபிரியா பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ எருமை மாட்டுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருந்தார். இது தொடர்பபக அவர் கூறியிருப்பதாவது:-
வைகை ஆற்றில் எருமை மாட்டை கழுவினால் கூட கூட்டம் கூடும். நடிகர் ஒருவரின் பொதுக் கூட்டத்துக்கு கூட்டம் கூடியதில் வியப்பு ஏதும் இல்லை. கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் நாடாள முடியாது. தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
கமல் பற்றிய செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரான ஸ்ரீபிரியா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு ராஜூ அவர்கள் கட்சிக்காரர்களை தண்ணீர் இல்லாத காவிரியில் குளிப்பாட்டி பார்க்கட்டும் கூட்டம் வரும். அய்யாவுக்கு தெரிஞ்சாலும் தெரியும்.
இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ - ஸ்ரீபிரியா ஆகியோருக்கிடையேயான இந்த மோதல் அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriPriya #MinisterSellurRaju
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ எருமை மாட்டுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருந்தார். இது தொடர்பபக அவர் கூறியிருப்பதாவது:-
வைகை ஆற்றில் எருமை மாட்டை கழுவினால் கூட கூட்டம் கூடும். நடிகர் ஒருவரின் பொதுக் கூட்டத்துக்கு கூட்டம் கூடியதில் வியப்பு ஏதும் இல்லை. கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் நாடாள முடியாது. தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
கமல் பற்றிய செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரான ஸ்ரீபிரியா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு ராஜூ அவர்கள் கட்சிக்காரர்களை தண்ணீர் இல்லாத காவிரியில் குளிப்பாட்டி பார்க்கட்டும் கூட்டம் வரும். அய்யாவுக்கு தெரிஞ்சாலும் தெரியும்.
இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ - ஸ்ரீபிரியா ஆகியோருக்கிடையேயான இந்த மோதல் அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriPriya #MinisterSellurRaju
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X