search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூர் பழைய காவல் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்
    X

    திருமானூர் பழைய காவல் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்

    திருமானூர் பழைய காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பதால் அதை ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பழைய காவல் நிலையம், எம்.ஜி.ஆர் சிலை எதிரே இயங்கி வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்ததையொட்டி அரியலூர் சாலையில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டு கடந்த 2012-ம் ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பழைய காவல்நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் துரு பிடித்து கிடக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு கேட்பாரற்கு கிடக்கும் இந்த மோட்டார் சைக்கிள்களை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×