என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமானூர் பழைய காவல் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்
Byமாலை மலர்8 April 2018 5:05 PM GMT (Updated: 8 April 2018 5:05 PM GMT)
திருமானூர் பழைய காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பதால் அதை ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் பழைய காவல் நிலையம், எம்.ஜி.ஆர் சிலை எதிரே இயங்கி வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்ததையொட்டி அரியலூர் சாலையில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டு கடந்த 2012-ம் ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழைய காவல்நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் துரு பிடித்து கிடக்கிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு கேட்பாரற்கு கிடக்கும் இந்த மோட்டார் சைக்கிள்களை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X