என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 3 பேர் கைது
Byமாலை மலர்7 April 2018 6:29 PM GMT (Updated: 7 April 2018 6:29 PM GMT)
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி:
சிவகாசியைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது.
நேற்று காலை தரைச்சக்கரத்திற்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல், காக்கிவாடன்பட்டி என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலியாகினர், இதனால் சிவகாசி வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்து தொடர்பாக இதுவரை மேலாளர் செந்தில்வேல் உள்பட 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான ஆலை உரிமையாளர்கள் கணேசன், ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது.
நேற்று காலை தரைச்சக்கரத்திற்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல், காக்கிவாடன்பட்டி என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பலியாகினர், இதனால் சிவகாசி வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெடி விபத்து தொடர்பாக இதுவரை மேலாளர் செந்தில்வேல் உள்பட 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான ஆலை உரிமையாளர்கள் கணேசன், ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X