search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை

    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் 9 ந்தேதி நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடுப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல இந்த ஆண்டும் பங்குனி திருவிழாவையொட்டி கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 1-ந் தேதி இரவு முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந் தேதி பால்குட ஊர்வலமும், பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற உள்ளது.
     விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.

    தேரோட்டத்தையொட்டி 9-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ஆகும், அதற்கு பதிலாக 21-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது. 

    இந்த உள்ளூர் விடுமுறையன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×